Pages

Monday, October 28, 2013

32 ஆண்டுகளாக ஒரு நாள் கூட தாமதம் இல்லை: அசத்துகிறார் மாற்று திறனாளி பெண் எழுத்தர்

27.10.2013,மும்பை :
மகாராஷ்டிராவில், இடுப்புக்கு கீழே செயல்படாத, 58 வயது அரசு பெண் அதிகாரி, 32 ஆண்டுகளாக, ஒரு நிமிடம் கூட, அலுவலகத்திற்கு, தாமதமாக வந்ததில்லை; இம்மாதம் அவர் ஓய்வுபெறப் போகிறார்.

போலியோ பாதிப்பு:உமா மாகரே, 58, மும்பையில், மாநில சமூக நலத்துறையில் எழுத்தராக பணி புரிகிறார். சிறு குழந்தையாக இருக்கும் போதே, போலியோ நோய் பாதிப்புக்குள்ளான அந்தப் பெண்ணின், இடுப்புக்கு கீழே, உறுப்புகள் செயல்படாது.எனினும், பிறர் உதவி இல்லாமல், தானாவே தன் வேலைகள் அனைத்தையும் மேற்கொள்ளும் இவர், கடந்த, 32 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட, அலுவலகத்திற்கு தாமதமாக சென்றதில்லை.இதை பாராட்டி, உயரதிகாரிகள் இவருக்கு பரிசு வழங்கி கவுரவித்துள்ளனர். இவரின் கணவர், கடந்த ஆண்டு இறந்து விட்டார்; அந்த துக்கத்திலும் இவர், அலுவலகம் வந்து சென்றுள்ளார்.இம்மாதம் ஓய்வுஇம்மாதம் பணியிலிருந்து ஓய்வுபெற உள்ள அவர், வேறு இனத்தை சேர்ந்த குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்து வருகிறார். ஓய்வுக்குப் பிறகு, சமூக சேவை ஆற்றப் போவதாக கூறுகிறார்.'கை, கால் நன்றாக இருக்கும் பலரும், அலுவலகத்திற்கு தாமதமாக வரும் நிலையில், உடல் ஊனமுற்ற இவர், 32 ஆண்டுகளாக, ஒரு நாள் கூட தாமதமாக வந்ததில்லை என்பது உண்மையில் வியத்தகு சாதனை தான்' என்கின்றனர், சகஊழியர்கள்.

Thanks to

No comments:

Post a Comment