Pages

Wednesday, October 30, 2013

காலில் மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை சஸ்பெண்ட்

30.10.2013, அகோலா: வாய் பேசமுடியாத, காதுகேளாத மாணவர்களை, தனது காலை மசாஜ் செய்யும்படி கூறிய அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்கான அரசு பள்ளியில் 7ம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றுபவர் சீத்தல் அவ்சர். இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு பலவித தொந்தரவுகளை அளித்துள்ளார். ஆசிரியை பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தாலும் மாணவர்களுக்கு அடிதான் கிடைத்துள்ளது. வகுப்பு நேரத்தில் ஏதாவது ஒரு மாணவன், தனது காலை மசாஜ் செய்துவிட வேண்டும் என்பதை சீத்தல் வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆசிரியையின் வரம்பு மீறிய தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய மாணவன் ஒருவன், ஆசிரியையின் கால் மசாஜ் செய்யப்படும் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து கல்வி அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் செய்தான். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆசிரியை தவறு செய்தது உண்மை என நிரூபிக்கப்பட்டதால், அவரை சஸ்பெண்ட் செய்ய விசாரணை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஆசிரியை சீத்தல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Thanks to

No comments:

Post a Comment