Pages

Wednesday, October 23, 2013

பாக்குமட்டை தட்டு தயாரிப்பில் மாற்றுத் திறனாளிகள்

23.10.2013,

சென்னை தியாகராய நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழில்முனைவு மையத்தில் பாக்குமட்டை தயாரிப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளான சந்தோஷ், லட்சுமி, கார்த்திக், விக்னேஷ், சாய்சந்தோஷ் ஆகிய 5 பேர் அலுவலக கவர்கள், கோப்புகள், காகித பைகள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தங்களது பெயரில் தலா ரூ.50 ஆயிரம் கடன் பெற்று ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட இயந்திரம் மூலம் பல்வேறு அளவுகளில் தினமும் 500 பாக்குமட்டை தட்டுகள் வரை தயாரிக்க உள்ளனர். இந்த தட்டுகள் ரூ.1.50 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக என்லைட்டன் தொழில்முனைவகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய அறக்கட்டளையின் தலைவர் பூனம் நடராஜன் தொடங்கி வைத்தார். கோட்டூர் வித்யாசாகர் தொண்டுநிறுவனத்தின் முதல்வர் கல்பனா,தொழில்முனைவு மையத்தின் அமைப்பாளர்கள் பாரதி, சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thanks to

No comments:

Post a Comment