Pages

Monday, December 30, 2013

மாற்றுத் திறனாளிகள் மேலாண்மை குறித்து பயிற்சிப் பட்டறை

கோவை, 26 December 2013 .

கோவை யூடீஸ் ஃபோரம் அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகள் மேலாண்மை குறித்த பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது.

கோவை யூடீஸ் ஃபோரம் அமைப்பு மற்றும் எஸ்.என்.ஆர். கல்லூரியின் சமூகப்பணித் துறை சார்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையை எஸ்.என்.ஆர். கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் யூடீஸ் போரம் அமைப்பின் முதன்மை அறங்காவலர் எஸ்.சூர்ய நாகப்பன் பேசுகையில், உடல் ஊனமுற்றோரின் நலனுக்கு கல்லூரி மாணவர்கள் எவ்வகையில் பங்களிக்க இயலும் என்பது குறித்து விளக்கினார். இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Thanks to

No comments:

Post a Comment