Pages

Wednesday, January 1, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு மாடு வாங்க கடன் உதவி

01.01.2014,  அந்தியூர்:

அந்தியூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் ஐந்து மாற்று திறனாளிகளுக்கு கறவை மாடு வாங்க கடன் வழங்கப்பட்டது.
அந்தியூர் அருகேயுள்ள பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ள ஐந்து மாற்று திறனாளிகளுக்கு கறவை மாடு வாங்க கடன் வழங்கப்பட்டது. மாற்று திறனாளிகள் என்பதால் பிரம்மதேசம் கூட்டுறவு சங்க தலைவர் தலைவர் சத்யநாராயணன், அவரவர் வீட்டுக்கே சென்று கறவை மாடு வாங்க கடனாக, 50,000 ரூபாய் வழங்கினார். தொடக்க வேளாண்மை வங்கி மேற்பார்வையாளர் நல்லசாமி, அ.தி.மு.க., மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் மகேஷ்ராஜா, கால்நடை மருத்துவர் சண்முகம், செயலர் சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Thanks to

No comments:

Post a Comment