Pages

Wednesday, February 19, 2014

விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாதனை

18.02.2014 மதுரை, :
மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டி 3 நாள் மதுரையில் நடந்தது. கைகால் பாதித்தவர்களுக்கான 50 மீட்டர் ஓட்டத்தில் திருப்பூர் வீரர் முரளிதாஸ் முதலிடம் பெற்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் திருவண்ணாமலை வீரர் சிவகிருஷ்ணன், நீளம் தாண்டுதலில் தஞ்சை மணிவேல், கூடைப்பந்து போட்டியில் மதுரை அந்தோணி மற்றும் வீல்சேர் போட்டியில் நெல்லை கோவிந்தன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்டத்தில் தஞ்சை கிரிஜா, 100 மீட்டர் ஓட்டத்தில் கீர்த்திகா, நீளம் தாண்டுதலில் தஞ்சை வீரலட்சுமி, கூடைப்பந்து போட்டியில் நாமக்கல் பாவை, வீல்சேர் பிரிவில் நெல்லை சுப்புலட்சுமி முதலிடம் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment