Pages

Wednesday, February 12, 2014

தையல் இயந்திரம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு

12.02.2014 கரூர், :
மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளதால் கலெக்டர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கரூர் கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இரண்டு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தையல் பயின்றதற்கான சான்று, குடும்ப அட்டை நகல் மற்றும் போட்டோ ஒன்று ஆகிய சான்றிதழ்களுடன் கரூர் கலெக்டர் அலுவலக வளாகம், தரைத்தளத்தில் அறை எண் 7ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என்று கரூர் கலெக்டர் ஜெயந்தி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Thanks to Dinakaran

No comments:

Post a Comment