Pages

Thursday, February 6, 2014

நெல்லையில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்..!

06.02.2014,
நெல்லை டவுண் லக்ஷ்மி திருமண மண்டபத்தில் வேலாயுதம் பிள்ளை டிரஸ்ட் மற்றும் திருநெல்வேலி ரோட்டரி சங்கம் இணைந்து நாகலட்சுமி – ராஜா மற்றும் தங்கலட்சுமி –முத்துகுமார் என்ற மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. திருநெல்வேலி ரோட்டரி சங்க தலைவர் சங்கரசுப்பு தலைமையில் கோட்டாட்சியர் சீனிவாசன் முன்னிலையில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன் திருமணத்தை நடத்தி வைத்தார். வேலாயுதம் பிள்ளை டிரஸ்ட் சார்பில் ஆண்டு ஒன்றுக்கு 5 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதென்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 2 ஜோடிகளுக்கான திருமணம் இன்று நடைபெற்றது. திருமணத்திற்கு 5 கிராம் தங்க தாலியும் மணமகன் –மணமகளுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் 15 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை, என சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. திருமண விழாவில் ரோட்டரி இயக்குனர் பரமசிவன், லக்ஷ்மி திரையரங்கின் மேலாளர்கள் ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மணமக்களின் உற்றார் உறவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Thanks to Sathiyam TV

No comments:

Post a Comment