Pages

Tuesday, February 4, 2014

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

04.02.2014 திருப்பூர்,
மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார் பில் திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

செயலாளர் ஜெயபால், பொருளாளர் ஆறுமுகம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் காளியப் பன், துணைச்செயலாளர் ராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ‘‘மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு சட்டத்தை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். ஊனமுற்றோருக்கு பலனளிக்கும் ஷரத்துத்துக் களை நீக்க கூடாது.

இவற்றை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். நிறுத்தி வைக்கப் பட்ட உதவித்தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினார்கள்.

முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பைசாஅகமது நன்றி கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment