Pages

Monday, March 17, 2014

4 பேருக்கு சென்னையில் கேவின்கேர் எபிலிட்டி விருது வழங்கப்பட்டது

17.03.2014, சென்னை:
வெவ்வேறு துறையில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு சென்னையில் கேவின்கேர் எபிலிட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கேவின்கேர் நிறுவனமும் எபிலிட்டி ஃபவுண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் மத்திய பிரதேசம், கேரளா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் எமினன்ஸ் மற்றும் மாஸ்ரி ஆகிய பிரிவுகளில் விருது வழங்கி வருவதாக கேவின்கேர் தலைவவர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கும் நோக்கத்தில் விருதுகள் வழங்கப்படுவதாக எபிலிட்டி ஃபவுண்டேஷன் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவிந்தரன் தெரிவித்துள்ளார்.
Thansk to

No comments:

Post a Comment