Pages

Saturday, May 24, 2014

காலால் தேர்வு எழுதி சாதனை படைத்த பத்தாம் வகுப்பு மாணவர்

24.05.2014,
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் காலால் எழுதி சாதனை படைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நேரு நினைவு சம்பூரணி அம்மாள் மாற்றுத்திறனாளி பள்ளியைச் சேர்ந்த மாணவர் மகேஷ்.

இவர் பிறவியிலேயே இரண்டு கைகளையும் இழந்தவர். ஆனால் தளராத மன உறுதியுடன் படித்த இவர் தனது கால்களையே கைகளாக கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.

இவர் தற்போது தமிழில் 53, ஆங்கிலத்தில் 51, அறிவியலில் 70, சமூக அறிவியலில் 70, கணிதத்தில் 52 என மதிப்பெண்களை பெற்று மொத்த மதிப்பெண்ணாக 282 மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்துள்ளார்.

No comments:

Post a Comment