Pages

Wednesday, July 23, 2014

ஒரே மாதிரியான உதவித்தொகை வழங்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

23.07.2014, நாடு முழுவதும் ஒரே மாதிரியான உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதை வ-யுறுத்தி திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தலைமை தாங்கியது.

மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரி செலுத்துவதில் முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment