Pages

Friday, August 22, 2014

பார்வையற்ற மாணவர்கள் தேர்வு எழுத கூடுதலாக 40 நிமிடம்

22.08.2014
யூ.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடம் வழங்கப்படும் என மகத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்கிற யூ.பி.எஸ்.சி மத்திய அரசு பணிக்கான காலி இடங்களிளை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வில் பார்வையற்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வு எழுதுவதால் தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகியவற்றில் தனித்தனியே கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்படும்.

இதன் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடங்கள் தேர்வு எழுத கிடைக்கும் என்றும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment