Pages

Monday, August 18, 2014

ஜயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 ஜயங்கொண்டம், 15 August 2014
மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 15 மாதங்களாக வழங்கப்படாத உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அரியலூர் மாவட்டத் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். செயலர் அடைக்கலசாமி, பொருளாளர் அமீர்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இதில் ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருப்பின் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட துணைத் தலைவர் குழந்தைவேல், துணைச் செயலர் அம்பிகாபதி, சிங்காரவேலன், பவித்ரா, சுகந்தி, தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment