Pages

Thursday, August 21, 2014

அரசுப் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு: முறைப்படுத்த வேண்டுகோள்

சென்னை, 20 August 2014
அரசுப் பணிகளில் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் செயலாளர் ஆனந்த் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முதுநிலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள், இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களில் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பின்னர், அதுதொடர்பான அரசாணை டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அவற்றில் முழுவிவரங்கள் இடம்பெறவில்லை. இது பார்வையற்ற பட்டதாரி மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

அரசுத் துறை காலிப் பணியிடங்களில் பார்வையற்றவர்களுக்கான 2 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் இந்தப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment