Pages

Thursday, October 30, 2014

தனியார் பஸ்களில் கட்டண சலுகை மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை


28.10.2014 கடலூர்:
தனியார் பஸ்களிலும் 50 சதவீதம் கட்டண சலுகை அளித்திட வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கடலூர் மாவட்ட குழுக் கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்புத் தலைவர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஆளவந்தார், மாவட்ட நிர்வாகிகள் ராஜ்குமார், வசந்தி, முத்தையன் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கேரளாவில் உள்ளது போல் தனியார் பஸ்களிலும் 50 சதவீதம் கட்டண சலுகை அளித்திட வேண்டும். திருமணம் மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவிகளுக்காக பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment