Pages

Monday, November 24, 2014

இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு

24.11.2014 திருச்சி, : திருச்சி மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடப்பாண்டு இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 45 வய துக்கு உட்பட்டவராக வும், அரசு மற்றும் தனி யார் நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். கை, கால் குறைபாடு டைய, காது கேளாத மற் றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு மட் டுமே மோட் டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அடை யாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் பின் புறம், திருச்சி என்ற முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ் வாறு கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment