Pages

Sunday, January 4, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமிபலாத்கார சம்பவத்தில்4 பேர் அதிரடி கைது

03.01.2015, ஓசூர்:
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக, நான்கு பேரை, போலீஸார் கைது செய்தனர்.

ஓசூர் அடுத்த, தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கொடகரை அருகே உள்ள, கீழ்கொச்சாவூரை சேர்ந்த விவசாயி வீரபத்திரப்பாவின், 16, வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த, 25ம் தேதி மாலை, கீழ்கொச்சாவூரை சேர்ந்த, வீரபத்திரன் மகன் முத்தப்பா, 26, மேல்கொச்சாவூரை சேர்ந்த பசப்பா மகன் மாதப்பா, 22, அதே பகுதியை சேர்ந்த மாதப்பா மகன் ருத்ரப்பா, 22, பசப்பா மகன் சித்தலிங்கா, 23, ஆகிய நான்கு பேர், கட்டையால் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தனர்.சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, முத்தப்பா, மாதப்பா, ருத்ரப்பா, சித்தலிங்கா, ஆகிய நான்கு பேர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார், அவர்களை நேற்று கைது செய்தனர்.

No comments:

Post a Comment