Pages

Wednesday, February 11, 2015

பாரதீய மகிளா வங்கி இளம் தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி வழங்க திட்டம்

10.02.2015, 
இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கத்தில் பாரதிய யுவசக்தி டிரஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் பாரதிய மஹிளா வங்கி, ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பாரதிய மகிளா வங்கியின் தலைவர் உஷா அனந்த சுப்பிரமணியனும் பாரதிய யுவசக்தி டிரஸ்ட்டின் நிர்வாக பொறுப்பாளருமான லட்சுமி வெங்கடேசனும் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுள்ள பொருளாதார, சமூகரீதியில் பின் தங்கியவர்கள், சிறுபான்மையினர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பலன் பெற முடியும். தொழில் முனைவோரின் தேவையைப் பொறுத்து 50 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெற முடியும்.

No comments:

Post a Comment