Pages

Tuesday, March 3, 2015

சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள்

2.03.2015 
பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சென்னைக் சாலிகிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியது: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் குறித்து மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் அவர்கள், தங்களது கல்வி, தொழில், வேலைவாய்ப்புகளில் பிறருக்கு இணையாக விளங்க முடியும்.

மாற்றுத் திறனாளிகள் தற்போது அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களது திறமையை ஊக்குவிக்கும் இது போன்ற தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன் என்றார் அவர்.

முன்னதாக சமூகம், கலை உள்பட பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான உதவிக்கரம் அமைப்பின் மாநிலத் தலைவர் டி.ஏ.பி. வரதக்குட்டி, சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் மரியஜீனா ஜான்சன், மாற்றுத் திறன் இசைக் கலைஞர் தான்சன், அரிமா சங்க மாவட்ட கவர்னர் கே.பி.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment