Pages

Saturday, April 11, 2015

காது கேளாதோர் பள்ளி தலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்'

11.04.2015, காஞ்சிபுரம்: 
காஞ்சிபுரம் அரசு காது கேளாதோர் பள்ளியில்,கணினிகளை திருடி விற்றதாக எழுந்த புகாரின்பேரில்,பள்ளி தலைமையாசிரியர்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் அடுத்த சதாவரம் பகுதியில் உள்ளது, அரசுகாது கேளாதோர் பள்ளி.இந்த பள்ளியில், மாணவர்களின் நலனுக்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, பல்வேறு உபகரணங்கள்வழங்கப்படுகின்றன.பள்ளியில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.அதன் அடிப்படையில்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் செந்தில்குமாரி, பள்ளியில் ஆய்வுசெய்துள்ளார்.அப்போது, பள்ளி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளும், பள்ளியில் இருந்தகணினிகள் மாயமானதும் தெரிய வந்தது.இதையடுத்து, பள்ளிதலைமையாசிரியர் பாண்டியனை, மாவட்ட மாற்றுத்திறனாளி துறை அலுவலர்செந்தில்குமாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment