Pages

Monday, April 6, 2015

திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை

06.04.2015, திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டைகளை வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தி.சீனிவாசன், சிறப்பு செயலாக்க திட்ட தனி துணை கலெக்டர் வீரப்பன், பயிற்சியாளர் சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment