Pages

Friday, May 1, 2015

தையல் இயந்திரம் பெற அழைப்பு

29.04.2015, ஈரோடு:
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.கை, கால் பாதிப்புத்தன்மை உடைய மாற்றுத்திறனாளிகள் அல்லது செவித்தறன் குறையுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல், 45 வயது வரை உள்ள, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஆறு மாத காலத்துக்கு குறையாத பதிவு பெற்ற நிறுவனத்திடம் இருந்து தையல் பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற்றவர்கள், விண்ணப்பம் செய்யலாம்.

இத்தகுதி உடையவர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி, விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment