Pages

Friday, May 22, 2015

மாற்றுதிறனாளிகள் மத்தியில் பிரபலமான ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஆப்பிள் கைகடிகாரத்தை புதிதாக தயாரித்து வெளியிட்டது. அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் டாட்டூ குத்தியவர்களின் கைகளில் கட்டும் பொழுது அது சரியாக செயல் படவில்லை என குற்றசாட்டு எழுந்தது.

இதற்கிடையில் மாற்று திறனாளியான மோளி வாட் எனற பெண்மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆப்பிள் கைகடிகாரம் மிகவும் சிறந்த முறையில் தாயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அணிந்திருக்கும் பொழுது அதில் உள்ள ‘taptic engine’ என்ற மென்பொருள் காது கேளாத மற்றும் பார்வையற்றவர்களுக்கு பெரிதும் பயன் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.

இந்த மென்பொருள் மிகவும் மென்மையான விதத்தில் செய்தியை தெரிவிப்பதாகவும் அதனை பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதாகவும் மோளி வாட் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்யும் போது சிறந்த வழிகாட்டியாக செயல் படுகிறது. மேலும் மற்றவர்களுக்கு எளிதான விதத்தில் செய்தி அனுப்பவும் தொடர்பு கொள்ளவும் முடிகிறது என தெரிவித்தார்.

ஆப்பிள் கைகடிகாரத்தை அணிந்திருப்பதன் மூலம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment