Pages

Thursday, July 2, 2015

மெட்ரோ ரயிலில் சலுகை விலை பயணச் சீட்டு: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

சென்னை, 02 July 2015
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை விலை பயணச் சீட்டு வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்-பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து புதன்கிழமை அந்தச் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்துக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் ரயில் பயணங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகைகளில் சலுகை கட்டணங்கள் உள்ளன. அதேபோல, மாநிலங்களுக்கு ஏற்றவாறு பேருந்து பயணங்களில் சலுகைகள் உள்ளன. தமிழகத்தில் பார்வையற்றவர்களுக்கும், பணிகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாவட்ட அளவில் இலவச பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
மாநிலத்தின் எந்த ஓர் இடத்திற்கும் 25 சதவீத கட்டணத்தில் பயணம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் மெட்ரோ ரயிலில் அப்படிப்பட்ட எந்த சலுகையும் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே, ரயில், பேருந்துகளில் உள்ளதுபோல மெட்ரோ ரயிலிலும் 4-இல் ஒரு பங்கு கட்டணத்தில் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடைய துணையாளர் ஒருவரும் பயணம் செய்ய சலுகை அளித்திட வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கென தனியான ஸ்மார்ட் கார்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment