Pages

Monday, July 13, 2015

கர்நாடகத்தில் காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை மந்திரி யு.டி.காதர் தகவல்

12.07.2015, மங்களூரு,
கர்நாடகத்தில் காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மந்திரி யு.டி.காதர் தெரிவித்தார்.

இலவச சிகிச்சை

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை மந்திரி யு.டி.காதர் நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒரு நபருக்கு மாநில அரசு ரூ.1½ லட்சமும், மத்திய அரசு ரூ.3 லட்சமும் நிதி உதவி செய்கிறது.

இந்த சிகிச்சையை செய்ய மொத்தம் ரூ.15 லட்சம் வரை செலவாகும். இருப்பினும் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனையினர் அரசுடன் இணைந்து இந்த சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர்.

120 குழந்தைகள் தேர்வு

முதற்கட்டமாக இந்த சிகிச்சைக்கு மாநிலம் முழுவதும் 120 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தட்சிணகன்னடா மாவட்டத்தில் மட்டும் 12 குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்த குழந்தைகளுக்கு அடுத்த வாரம் முதல் தேவையான உபகரணங்கள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்.

கர்நாடகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களில் 150 வாகனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்த ஆம்புலன்ஸ்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆம்புலன்ஸ்கள் ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் எனது அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அது சரியல்ல. அதுபற்றி சட்டசபை கூட்டத்தொடரில் அவர்கள் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment