Pages

Saturday, July 18, 2015

வழுக்குமரம் ஏறி வாகைசூடிய DEAF மாற்றுத் திறனாளி இளைஞர்

16.07.2015, வடமதுரை:
வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் மாற்று திறனாளி இளைஞர் 60 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி வாகை சூடினார்.
வடமதுரை சிங்காரகோட்டையில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பகவதிம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. மாவிளக்கு, முளைப்பாரி, அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தல் நடந்தன.

நேற்று முத்தாலம்மனுக்கு படுகளம் அமைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக எண்ணெய் கழுமரத்தில் (வழுக்கு மரம்) ஏறும் போட்டி நடந்தது. ஊர் மந்தையில் இருந்த 60 அடி உயர வழுக்கு மரம் நடப்பட்டு இருந்தது.

பாரம்பரியமாக ஏறும் இளைஞர் குழுவினர் ஒருசேர முயற்சித்தும், இறுதியில் வாய் பேச இயலாத மாற்று திறனாளி ராமர் மரத்தின் உச்சியை அடைந்து வாகை சூடினார். அங்கிருந்த விபூதி பொட்டலத்தை எடுத்து வந்து கோயிலில் வழிபட்டு பக்தர்களுக்கு வழங்கினார்.

No comments:

Post a Comment