Pages

Monday, August 17, 2015

மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் மது விலக்கு தொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம் பெறாததால் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவுள்ளனர்.

சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் டிசம்பர்-3 இயக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 20க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மது விலக்குக்கோரி ஏற்கனவே 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டமும், கடந்த 8 நாட்களாக காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் மது விலக்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகாததை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கிவுள்ளனர்.

தமிழகத்தில் மது விலக்கு அமல்பத்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment