Pages

Saturday, September 12, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு மொபைல் பழுது நீக்கும் பயிற்சி

11.09.2015, திருவள்ளூர்: 
திருவள்ளூரில் இயங்கி வரும் ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனம், வசந்தம் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செல்போன் பழுதுபார்க்கும் பயிற்சி துவக்க விழா ஈக்காடு ஊராட்சியில் நேற்று நடைபெற்றது.இதற்கு வசந்தம் கூட்டமைப்பின் தலைவர் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார். ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன மேலாளர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். ‘ஹெல்ப் யூ’ அறக்கட்டளையின் திட்ட அலுவலர் கருணாநிதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் பங்கேற்று பயிற்சியை தொடக்கி வைத்தார்.இந்தப் பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். தொண்டு நிறுவன அலுவலர் பழனி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment