Pages

Sunday, October 25, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில்வே படிவம் வருகிற 2–ந் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்

25..10.2015
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் ரெயில்வே படிவம், மாற்றுத்திறனாளியை துணை ஒருவர் பஸ்சில் அழைத்து செல்லும் படிவம் அடுத்த வருகிற 2–ந் தேதி முதல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் தேசிய அடையாள அட்டை உள்ள மாற்றுத்திறனாளிகள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தாலுகா மருத்துவமனைகளிலேயே மருத்துவர் சான்றொப்பம் பெற்றுக்கொள்ள வருகிற 2–ந் தேதி முதல் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.

மேற்கண்ட தகவலை கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment