Pages

Thursday, October 29, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள போட்டி சென்னையில் நாளை நடக்கிறது

சென்னை, அக்.29- 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட பிரிவு சார்பில் மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் ஆகியோருக்கு தடகள போட்டி அடையாறில் உள்ள செயின்ட் லூயிஸ் காதுகேளாதோர் பள்ளியில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

தூர ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், டிரிபிள்ஜம்ப் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் அரசு வழங்கிய அடையாள அட்டை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரதாப்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment