Pages

Wednesday, October 21, 2015

DEAF மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி கைது


21.10.2015, நாகை மாவட்டம், சீர்காழி அருகே DEAF மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 2 வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தர்காஸ் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மேலும், அவரது 2 வயது குழந்தை சரத் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவான குற்றவாளி ரமேசை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், திண்டிவனம் பேருந்து நிலையத்தில் ரமேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் மயிலாடுதுறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரியா உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment