Pages

Wednesday, November 4, 2015

பி.இ. மாணவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை: ஏஐசிடிஇ அறிவிப்பு

சென்னை, 03 November 2015
பி.இ., பாலிடெக்னிக்குகளில் சேர்ந்துள்ள மாணவிகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.
இந்தத் திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் பாலிடெக்னிக், பி.இ. படிப்புகளில் முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளில் 4 ஆயிரம் பேருக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆயிரம் பேருக்கும் கல்லூரி கல்விக் கட்டணம் அல்லது ரூ. 30 ஆயிரம் ரொக்கம், 10 மாதங்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2015-16 கல்வியாண்டில் சேர்ந்துள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 23 கடைசித் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு www.aicte-india.org இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment