Pages

Thursday, January 7, 2016

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

05.01.2016, சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகையை நிறுத்தப்பட்ட காலத்திற்கும் சேர்த்து வழங்க வேண்டும், அரசு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிதொகை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை போல வருவாய் துறையிலும் மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு பேராட்டத்தை நடத்தினர்.

தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை நல சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் பாலகணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் குமாரசாமி, மாவட்ட உதவி தலைவர் இசக்கி, சி.பி.எம் வட்டார செயலாளர் அசோக்ராஜ், வட்டார தலைவர்கள் பசும்பொன், செல்வமுருகன், மாரியப்பன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment