Pages

Tuesday, January 26, 2016

கடந்த ஆண்டில் சென்னையில் ஆசிரியை தாக்கியதில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர் ராகவராஜ் இறந்ததால் காதுகேளாத மாணவர்கள் கோபம் கொதிப்பு



கடந்த ஆண்டில் (24.05.2014) சென்னையில் பள்ளி ஆசிரியை தாக்கியதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர், கடந்த மூன்று மாதங்களாக கோமாவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சாந்தோமில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்களுக்கான பள்ளியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ராகவராஜை, பள்ளி ஆசிரியை ஷகிலா ஜான்சியும், அவரது கணவரும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், ராகவராஜ் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்து, அவரது பெற்றோர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

ஆனால் இதுவரை புகார் எந்த பயனும் இல்லை. ஆசிரியர்களுக்கும் காதுகேளாத மாணவர்களுக்கும் கடும் விவாதம் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட மாணவர்க்கு ரூ. பத்து லட்சம் நஷ்ட ஈடு தருமாறு பள்ளி காதுகேளாத மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையும் ஏற்க மறுத்தால் காதுகேளாத மாணவர்கள் கடும் போராட்டம் நடத்த முடிவு செய்து வருகிறார்கள்,

No comments:

Post a Comment