Pages

Friday, February 19, 2016

பிப்ரவரி 21-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் பயிற்சி

கோவை, 19 February 2016
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு நாள் சுயதொழில் பயிற்சி பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு, சுயதொழில்களில் மாற்றுத் திறனாளிகள் ஈடுபட கேலிபர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வழிகாட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, கோவை, தடாகம் சாலை, கே.என்.ஜி. பிரிவில் அமைந்துள்ள முத்து எம்பவர்மென்ட் அறக்கட்டளை மற்றும் கேலிபர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு ஆகியன இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகள், அரசின் நிதி உதவிகள், தனியார் நிறுவனங்கள் வழங்கும் வேலைவாய்ப்புகள் ஆகியவை எடுத்துரைக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க 9442556168, 9944556168 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் பிப்ரவரி 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும்.

No comments:

Post a Comment