Pages

Tuesday, February 9, 2016

​மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை நிறைவேற்ற கனிமொழி வலியுறுத்தல்


09.02.2016, அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வேப்பேரி தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இன்று நண்பகல் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஈ.வி.கே.சம்பத் சாலையில் அவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்தார்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கனிமொழி, மாற்றுத்திறனாளிகளுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment