Pages

Tuesday, February 23, 2016

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

21.02.2016
ஈக்காட்டுதாங்கல் : மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளுக்கு, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான, 15வது மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி, மார்ச் 5ம் தேதி, நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை நடக்கிறது. அதில், 52 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை, எண், 10, நான்காவது குறுக்கு தெரு, பாலாஜி நகர், ஈக்காட்டுதாங்கல் என்ற முகவரிக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பெற்று, வரும், 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 98403 05804, 98404 33964 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment