Pages

Monday, February 15, 2016

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அளித்த பட்டத்தை திருப்பி அளித்த மாற்றுத்திறனாளி



14.02.2016, உயர்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவில்லை என கூறி நெல்லையில் ஆளுநர் ரோசையா பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டத்தை மாற்றுத்திறனாளி மாணவர் திருப்பி அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ரோசையா கலந்துக்கொண்டு 370 பேருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார்.

அப்போது நாட்டார் வழக்காட்சியியல் துறையில் ஆய்வு மேற்கொண்ட பெரியதுரை என்ற மாற்றுத்திறனாளி மாணவர், உயர்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கவில்லை என கூறி தனக்கு அளித்த பட்டத்தை ஆளுநர் ரோசையாவிடம் திருப்பி அளித்தார். இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியதுரை, மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாக வழங்கக் கோரி, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்

No comments:

Post a Comment