Pages

Tuesday, February 9, 2016

கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகளின்றி தவித்த அவல நிலை


09.02.2016,  சென்னையில் கைது செய்யப்பட்டு வேப்பேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இரவு முழுவதும் தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், உதவித்தொகையை குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுததி சாலைமறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும், வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். எனினும் இன்றும் தங்களது போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் தொடர்கின்றனர். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இரவு முழுவதும் இன்னலுக்கு ஆளானதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment