Pages

Wednesday, February 17, 2016

கோட்டையை நோக்கி பேரணி நடத்தவிருந்த மாற்றுத் திறனாளிகள் சென்னையில் கைது

சென்னை, பிப்.17-
அரசுப் பணியிடங்களில் 3 சதவீத வேலைவாய்ப்பு, 40 சதவீத குறைபாடுள்ளவர்களையும் மாற்றுத் திறனாளியாக அங்கீகரித்தல், மாதாந்திர உதவித்தொகையை ரூ. ஆயிரத்தில் இருந்து ஐயாயிரமாக உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அரசை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஒருகட்டமாக, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி இன்று பேரணியாக செல்ல தீர்மானித்திருந்தனர். இதையொட்டி, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் நூறு மாற்றுத் திறனாளிகளை கைது செய்துள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment