Pages

Saturday, February 20, 2016

மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

20.02.2016, சேலம்: வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, சேலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற இயக்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று, பல்வேறு கோஷங்கள் போட்டவாறு, மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்லப்பன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். எந்த பணியையும் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சதவீத இட ஒதுக்கீடு இருந்தும், வேலை வழங்காமல் புறக்கணித்து வருகின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment