Pages

Monday, March 7, 2016

தபால் துறையில் 127 வேலை

தமிழக தபால் வட்டத்தில் பன்முக அலுவலர் (மல்டி டாஸ்கிங் ஸ்டாப்) பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 127 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவினருக்கு 88 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 29 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 10 இடங்களும் உள்ளன. 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி. பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும். 27-3-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்துவிட்டு இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27-3-16.

இது பற்றிய விரிவான விவரங்களை www.dopchennai.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்

CLICK HERE

No comments:

Post a Comment