Pages

Tuesday, March 29, 2016

பொலிவியாவில் உதவி தொகையை உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் வினோத போராட்டம்

29.03.2016, பொலிவியா,
பொலிவியாவில் உதவி தொகையை உயர்த்தகோரி மாற்றுத்திறனாளிகள் வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிவியாவில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுதிறனாளிகள் வினோத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள கோஜாம்பாம்பா நகரத்தில் இருந்து லாபாஸ் வரையிலான மலைப்பகுதியை சக்கர நாற்காலி மற்றும் ஊன்று கோல் கொண்டு மாற்றுதிறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாற்று திறனாளிக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்த முடியாது என்று அந்நாட்டு அரசு திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், தங்களது உதவித்தொகையை உயர்த்த கோரி, மாற்றுதிறனாளிகள் தங்களை வறுத்தி கொண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 150-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment