Pages

Sunday, March 13, 2016

உதவித் தொகையை உயர்த்தக் கோரி பாலத்தில் நாற்காலியில் தொங்கிய படி நூதன போராட்டம்


10.03.2016, பொலிவியா: உதவித் தொகையை உயர்த்தி தரக்கோரி பொலிவியா நாட்டில் பாலம் ஒன்றில் இருந்து நாற்காலியில் தொங்கியபடி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் வழங்கப்படும் உதவி தொகையை உயர்த்தி தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர் உண்ணாவிரதம், மற்றும் தாங்களை தங்களாகவே சிறையில் அடைத்துக் கொள்ளுதல் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக அந்நாட்டில் உள்ள ஒரு முக்கிய பாலத்தில் நாற்காலிகளில் தொங்கிய படி போராட்டம் நடத்தினர். தொடர் போராட்டங்களை நடத்தியும் பொலிவியா அரசு இதுவரை தங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்று மாற்றுதிறனாளிகள் வேதனை தெரிவித்தன. இதே கோரிக்கையை முன்வைத்து முதியவர்களும் பொலிவியாவில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment