Pages

Wednesday, May 18, 2016

பிளஸ் 2 தேர்வில் காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவிகள் இருவர் சாதனை

17.05.2016, பிளஸ் 2 தேர்வு முடிவில் இந்த ஆண்டு பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களைக் கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கான மாநில மற்றும் மாவட்ட ரேங்க் பட்டியல்களை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களில் நாகர்கோவில் ஓரல் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.விஜித்ரா, சென்னை சிறுமலர் கான்வென்ட் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.காயத்ரி ஆகியோர் 1200-க்கு 923 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.திவ்யலட்சுமி 921 மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தையும், நாகர்கோவில் ஓரல் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.அஸ்வின்குமார் 915 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment