Pages

Tuesday, May 24, 2016

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்

24.05.2016,  தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

உதவி தொகை
வேலை வாய்ப்பு அலுவலக பதிவு தாரர்கள் தங்களது தகுதியினை வளர்த்துக் கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்திட உதவிடும் வகையில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவி தொகை பெற தகுதியற்றவர்கள் ஆவர்.

இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற 10–ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், 12–ம் வகுப்பு, மற்றும் பட்டயப் படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வி தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். 31.3.2016–க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு
பயன்தாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பை சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களில், 10 வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள கல்வித்தகுதிக்கு ரூ.600–ம், 12–ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு ரூ.750–ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000–ம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானத்தில் உச்ச வரம்பு ஏதும் கிடையாது. 10 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் பாஸ்போட் சைஸ் புகைப்படம் ஒன்று, தேசிய மயமாக்கப்பட்ட (மாற்றுத்திறனாளிகளின் பெயரில் துவங்கப்பட்ட) வங்கி கணக்கு புத்தகம், ஊனமுற்றோர் அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வந்தாலோ அல்லது இதற்கு முன்பு பயன்பெற்றிருந்தாலோ வரத் தேவையில்லை.

30–ந் தேதி கடைசி நாள்
வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும். எனவே தகுதியுடைய பதிவுதாரர்கள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க வருகிற 30–ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment