Pages

Sunday, May 8, 2016

தலையில் கல்லைப் போட்டு மனைவி, மகள் கொலை:DEAF மாற்றுத்திறனாளி கைது

04.05.2016
காட்பாடியில் மனைவி, மகள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வாய் பேச முடியாத கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

காட்பாடி ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்புப் பகுதி கோயில் முன் பகுதியில் உள்ள இடத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பிரகாஷ்(30), தனது மனைவி மீனா (28), 6 வயது மகள் ஆகியோருடன் தங்கியிருந்தார். இவர் குப்பைகளைச் சேகரித்து விற்பனை செய்து வந்தார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை மீனாவும், அவரது மகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த காட்பாடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களின் அருகே ரத்தக் கறையுடன் நின்ற பிரகாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரையும் கொலை செய்ததை பிரகாஷ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment