Pages

Saturday, June 4, 2016

மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவி தொகை பெற ஜூன் 8ஆம் தேதி கடைசி

02.06.2016
கல்வி உதவி தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் ஜூன் 8ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் கல்வி தகுதியை பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்த மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை பெற தகுதி பெற்றவர்களாவர். ஏற்கனவே மாவட்ட வேலைவாய்ப்பு மூலம் உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள், வங்கி கணக்கு புத்தகம், வேலை வாய்ப்பு அட்டை, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஜூன் 8ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment