Pages

Saturday, June 11, 2016

காது கேளாதோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை

11.06.2016, கடலூர் மஞ்சக்குப்பத்தில் காது கேளாதோருக்கான அரசு சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு 3 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் இப்பள்ளியில் கல்வி, உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உதவித்தொகை, காதொலிக் கருவி, பேருந்து பயண அட்டை மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும்.

தற்போது, 2016-17-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு 24, வேணுகோபாலபுரம் பிரதான சாலை, மஞ்சக்குப்பம் என்ற முகவரியிலோ அல்லது 04142-221744, 94875 55948 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அ.மரியபாஸ்கா தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment